வெள்ளி, ஏப்ரல் 12, 2019



அலைகள்
ஆர்ப்பரிக்காத
ஒரு
நிசப்த வேளையில்
நனைத்து விட்டேன்
என் கால்களை
உன் கடலில் ..

இப்பொழுதெல்லாம்
சலசலக்கும் ஓடை
நில்லாமல்
ஓடும் நதிகள்
பார்ப்பதே இல்லை ..

குளித்து விடுகிறேன்
என்
இடுப்பில் செருகிய
உன் முகவரியோடு !

- அஷ்ஃபா அஷ்ரஃப் அலி -