வியாழன், ஜூன் 21, 2012

தீயதை தீண்டாதே

கொற்றவனின் துணையின்றி கொள்ளா வாழ்வு
மற்றவனின் மருவலிலே சுகமாய்  ஆகா
சிற்றின்பப் பெண்டிர்தம் பொல்லா நோக்கு
சீவியத்தை சீரழிக்கும் தீதே தீதே !!

கட்டுக்கும் அடங்காத ஆவல் கொண்டு
சருகுவதால் தீதுனக்கு அறிந்து விடு
கூட்டுக்குள் அடங்குமுந்தன் மானமின்று
நாட்டுக்குள் பரவுவது சுலபம் அன்றோ !!

மனை மணக்க வந்தவளே என்பதனால்
மனையாளே என்றுனக்கு பெயரும் உண்டு
வினையாக இல்லாமல் நிந்தன் வாழ்வு
துணையோடு வாழ்வாங்கு வாழ்ந்தால் போதும் !!

மறுதளித்த வாழ்வெமக்கு வேண்டாம் கண்ணே
ஒருதலையாய் ஒன்றிணைந்து வாழ்ந்தால் வெற்றி
தறுதலையாய் வாழ்ந்துனது வாழ்வினையே
தறிகெட்டு வாழ்வதிலே சுகமே இல்லை !!!