வெள்ளி, மே 03, 2013

நல்லதொரு தாரம் வேண்டும் !!



வெள்ளை உள்ளம் கொண்டதொரு
 மனைவி வேண்டும்  - தினம்
தொல்லை அற்ற வாழ்வெனக்கு
 கிடைக்க வேண்டும் !
தற்பெருமை கொள்ளாத
 இல்லாள் வேண்டும்  - வெறும்
சொற்பெருமை தினம் பேசா
 இனியாள் வேண்டும் !



மனை காக்கும் மகராசி
 எனக்கு வேண்டும்  - அவள்
எனை ஈன்ற பெற்றோரை
 போற்ற வேண்டும் !

இல்லறத்தில் இன்புற ஓர்
 இனியாள் வேண்டும்  - தினம்
நல்லறங்கள் செய்பவளாய்
 இருக்க வேண்டும் !

ஈகை நிறை மனம் கொண்ட
 மங்கை வேண்டும் - தான்
ஈன்றெடுக்கும் குழந்தைக்கும்
 நல்லதொரு தாயாய் வேண்டும் !

வாழ்வில் என்றும் என்னோடு
 துணையாய் வேண்டும் - வரும்
தாழ்வில் எந்தன் கரம் கோர்க்கும்
 தாரம் வேண்டும் !

நாலு குணம் கொண்டவளாய்
 துணைவி வேண்டும்  -  தினம்
பால் பொழியும் நன்னாட்கள்
 விடிய வேண்டும் !

நிறைந்து விட உள்ளத்தில்
 ஒருத்தி வேண்டும்  - அது
இறைவனவன் அருட்கொடையாய்
 அமைய வேண்டும் !!!