செவ்வாய், மே 13, 2014

கடல் அன்னை ..

அலையெனப்  பொங்கும்  ஆழிதரும்
  அற்புதம்  நமக்குப்  பலவாகும்
விலையெனப்  போகும்  நல்முத்தும்
  விளைப்பவள்  நமது  கடலன்னை
தலைவிரித்  தாடிடும்  தருணத்தில்
  தடல்புடல்  என்றே  ஆடிடுவாள்
நிலைகுலைந்  தவளே  நின்றாலும்
  நிம்மதி  தரைக்கும்  அவளன்றோ !


பகலோன்  வண்ணக் கதிர்புணர்ந்து
  பெருமழை  தருவதும்  கடலன்னை
தகவெனக் கொதிக்கும்  வெப்பத்தால்
  தலைகவி  ழாதவள் 
கடலன்னை
இகத்தினில்  அலையும்  பூங்காற்றும்
  இதமாய்  அவள்மேல்  படர்ந்துப்பின்
நிகரே  இல்லா  தேகசுகம்
  நித்தம்  தருவதும்  கடலன்னை !


அறுசுவை  உணவுக்  குயிராகும்
  ஆழிதரும்  நல்  உப்பாகும்
ஆறுகள்  நதிகள்  வழிந்தோடி
  ஆறுதல்  அடைவது   இவள்மடியில்
நிறைந்தவள்  இகத்தினில் 
முப்பங்கு
  நிலத்திடை  அளவோ 
ஒருபங்கு
இளைத்தோர்  இறங்கி  அள்ளிடத்தான்
  இல்லையென்ப  தில்லையிந்த  கடலன்னை !



       அஷ்பா அஷ்ரப் அலி