திங்கள், ஜனவரி 23, 2017

கட்டளைக் கலிப்பா



ஏற்றம் பெற்றவ ரென்கிறோம் நாளெலாம்
ஏனோ யெம்மிடை இத்தனை இன்னலோ
போற்று முள்ளமும் பாங்குட னின்றியே
போற்றார் போலவே வாழ்கிறோ மெங்கிலும்
ஏற்றத் தாழ்வினை எத்தனை காலமாய்
என்றும் நம்மிடை கொண்டுமே வாழ்வது ?
மாற்ற மில்லையேல் மண்ணிலே நாமெலாம்
மாக்கள் போலவே வாழ்கிறோ முண்மையே !



( அரையடி ; தேமா - கூவிளம் - கூவிளம் கூவிளம் )

கருத்துகள் இல்லை: