ஞாயிறு, பிப்ரவரி 12, 2017

கும்மிச் சிந்து ..



செக்கச்சி வந்தவள் செங்கனி வாயிதழ்
செந்தளிர்ப் போடுதான் வந்துநின் றாள்
வெக்கத்தி லென்முன்னே வேல்விழி யாலவள்
வெட்டியே யேதேதோ சொல்லநின் றாள் !


பக்கத்தில் நின்றவள் பார்வையின் வீச்சினில்
பாதிவு யிர்கையில் வந்தது போல்
சொக்கினே னென்னிலே ! சுந்தர முள்ளதா ?
சொல்லுங்கள் தோழரே உள்ளது போல் !

கருத்துகள் இல்லை: