வெள்ளி, ஏப்ரல் 01, 2016

தரவு கொச்சகக் கலிப்பா !

வருவாய்நீ யெனநாளும் வழிமீது விழிவைத்துப்
பெருமூச்சு விடுகின்றேன் பெருவாழ்வு தருகவென
ஒருபோது முனைமறவேன் உயிரேவுன் தடந்தொட்டு
வரும்பாதை தனைப்பார்த்து வயதேறப் பதறுகிறேன்

ஆதலினால்

உயர்வாம் காதலை உயர்வெனப் போற்றித்
துயர்க ளிலாமல்  தூய்மையுங் கொண்டே
உயர்வாய் வாழ்வோ முலகில்
இயம்பிடு ஒருசொல் இன்மொழி கொண்டே !

கருத்துகள் இல்லை: