வியாழன், பிப்ரவரி 27, 2014

கண்கெட்டுக் கிடக்குதடா !!

கண்கெட்டு  கிடக்குதடா  உலகம்  -  காணும்
களமெல்லாம்  நடக்குதடா  கலகம்
கால்பட்ட  இடமெல்லாம்  குருதி  -  இனக்
கோளாறு  இருக்கும்வரை   உறுதி  ..

உள்ளோர்க்கு  ஒன்றிங்கு  சட்டம்  -  உயர்
வில்லார்க்கு  கிடைக்குதிங்கு  பட்டம்
எல்லோர்க்கும்  இரத்தநிறம்  சிவப்பு  -  அதை
எண்ணாதோர்  மனதிலேனோ  கசப்பு  ..

கண்கெட்ட  விலைவாசி  உயர்வால் -  மக்கள்
கண்ணீரை 
அணைத்திங்கே  அயர்வார்
புண்ணாகிப்  போனோரும்  உண்டு  -  தினம்
புழுதிவாரிப்  போட்டோரும்  உண்டு ..

ஆகாது  என்றாலும்  தேகம்  -  தினம்
காணாது  என்றலறும்  போகம்
வேகாது  வாழ்வோர்க்கும்  ஆசை  -  வெந்து
வேக்காடு 
ஆனோர்க்கும்  ஆசை ...

     அஷ்பா அஷ்ரப் அலி 

கருத்துகள் இல்லை: