அன்றலர்ந்த தாமரையோ - அன்றி
அணிலளைந்த செங்கனியோ
கன்றிழந்த காளையைபோல் - எதைநீ
கண்சுழற்றி தேடுகிறாய் !
வண்டினங்கள் வாசல்வழி - தினமும்
வந்துவந்து போகுதடி
பண்பிழந்து போகுமென்றால் - மனசு
புண்தொடுத்து வேகுமடி !
காலமுன்னைக் கொல்லுதென்றால் - நீ
கண்ணசைத்து சொல்லுபுள்ள
ஆதவனைப் போலயிங்கு - நானும்
காத்திருக்கேன் ஊருக்குள்ளே !!
அஷ்பா அஷ்ரப் அலி
அணிலளைந்த செங்கனியோ
கன்றிழந்த காளையைபோல் - எதைநீ
கண்சுழற்றி தேடுகிறாய் !
வண்டினங்கள் வாசல்வழி - தினமும்
வந்துவந்து போகுதடி
பண்பிழந்து போகுமென்றால் - மனசு
புண்தொடுத்து வேகுமடி !
காலமுன்னைக் கொல்லுதென்றால் - நீ
கண்ணசைத்து சொல்லுபுள்ள
ஆதவனைப் போலயிங்கு - நானும்
காத்திருக்கேன் ஊருக்குள்ளே !!
அஷ்பா அஷ்ரப் அலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக