செவ்வாய், பிப்ரவரி 25, 2014

அன்றலர்ந்த தாமரையோ நீ !!

அன்றலர்ந்த  தாமரையோ  -  அன்றி
     அணிலளைந்த  செங்கனியோ
கன்றிழந்த  காளையைபோல்  -  எதைநீ
     கண்சுழற்றி  தேடுகிறாய்  !

வண்டினங்கள்  வாசல்வழி   -  தினமும்
     வந்துவந்து  போகுதடி
பண்பிழந்து  போகுமென்றால்  -  மனசு
    
புண்தொடுத்து  வேகுமடி  !

காலமுன்னைக் 
கொல்லுதென்றால்  -  நீ
     கண்ணசைத்து  சொல்லுபுள்ள
ஆதவனைப்  போலயிங்கு  -  நானும்
     காத்திருக்கேன்  ஊருக்குள்ளே   !!


          அஷ்பா அஷ்ரப் அலி 

கருத்துகள் இல்லை: