செவ்வாய், டிசம்பர் 17, 2013

என் தளம் ( புத்தளம் )

மண்ணுக் கேற்ற  வளமுண்டு
 மனதுக் கினிய மக்களுண்டு
எண்ணில் அறிவில் சான்றோரும்
 ஏற்றம் பெற்றோர் இங்குண்டு ..

வந்தோர் வருவோர் வரவேற்று
 வாழ்வை அளிக்கும் மனங்கொண்டோர்
சிந்தும் கண்ணீர் கண்டாலே
 சிறப்பாய் ஈவோர் இங்குண்டு ..

வண்ணக் கலைகள் அறிந்தோரும்
 வளையா நெஞ்சம் கொண்டோரும்
பொன்னுக் கிணையாய் மனங்கொண்டும்
 மின்னும் மாந்தர் இங்குண்டு ..

தளங்கள் அறியா மனிதருண்டு
 ( புத் ) தளத்தை அறியா
தாருண்டோ
தளத்தில் தளமாய் நிலைகொண்ட
 தர்க்கம் நிறைய இங்குண்டு ..

இளைஞர் இங்கே ஒன்றிணைந்து
 இழந்த வனப்பு வரவேண்டும்
வளங்கள் கண்டே வசைபாடும்
 வாய்கள் மூடி அழவேண்டும் ...

   அஷ்பா அஷ்ரப் அலி 

கருத்துகள் இல்லை: