வெள்ளி, ஜனவரி 13, 2017

ஆசிரியத் தாழிசை

வன்புணர் வாளரே வழியினி லெங்கும் 
என்மக ளுனைநான் எண்ணியே கவலை 
கண்மணி கவனங் காமுக ரெதிரிலே
குழவிக ளாயினும் குமரிக ளாயினும்
சுழலுங் காமச் சுடரில் குளித்திடக்
குழந்தாய் ! குதறுங் கூட்டம் எதிரிலே

அயலவர் நெஞ்சிலு மண்டி விடாதே 
துயர்தரத் தயங்கார் தூண்டிட காமம் 
அயர்ந்து விடாதே அல்லல் லெதிரிலே

கருத்துகள் இல்லை: