வெள்ளி, பிப்ரவரி 28, 2014

பொன்னழகு பூத்திருப்பாள் !!

நித்திலத்தின்  நிறைவாழ்வோ  நேசத்தின்  நிறைகுடமோ
     சித்திரமாய்  சிலைவடிவாய்  செங்கமலக்  காரிகையாள்
உத்திகொண்டு  போராடிப் 
பொற்கொடியின்  கைகோர்க்க
    
மெத்தவுந்தான்  பாடெனக்கு  முத்திவிடும்  பித்தெனெக்கு ..


சிற்றிடையோ  சிறுகொடியோ  சிணுசிணுத்த  செந்தேகம்
     செங்கனியின்  செழிப்பினிலே செவ்வானம் 
செயலிழக்கும்
பொ
ற்கிளியின்  பூவிதழில்  பூவாடை  புன்னகைக்கும்
      பொலிவென்றால்  பொலிவதுவே  பொன்னழகு  பூத்திருக்கும் ..


இத்தளத்தில்  இவள்போல  இன்னொருத்தி கிடைப்பாளோ
     இல்லாளாய்  என்னுள்ளம்  இனியொருபெண்  இணைவாளோ
சுத்தமுள்ள  எண்ணமுண்டு  சத்தியத்தில்  வாழ்வுமுண்டு
     சேர்த்துவிடப்  பெரியோரே  சார்ந்திடுவீர்  என்கூட  ..



            அஷ்பா  அஷ்ரப் அலி 

கருத்துகள் இல்லை: