புதன், ஜனவரி 15, 2014

பாவெழுத துணிந்து விட்டேன் !!

பண்ணெடுத்து  பாவெழுதும்  பாவலரைக்  கேட்டு
பாவெழுதி  பழகிடவே  பலநாட்கள்  கேட்டும்
பண்பாடே  இல்லாது  பகிடியுடன்   பதிலளிப்பார்
பாலைவனப்  பூவுனக்கு  பாவொரு  கேடாவென்று

பள்ளியிலே  நல்லதமிழ்  படித்ததில்லை இலக்கணமாய்
கள்ளியெனக்  குத்தியது  கவி
ரவர்  அகம்பாவம்
அள்ளியெனை  அரவணைத்த  அழகுதமிழ்  நூல்களினால்
துல்லியமா  யில்லைதான்  துரும்பேனும்  கற்றறிந்தேன்


சிற்றெறும்பாய்  சிறுகவிதை  சிந்தனையில்  கிறுக்குவதை
சிறப்பென்று  முகநூலில்  சிலிர்க்கின்ற  நட்புகளால்
நாற்றெனவே  நடுகையிலே  நாளொன்றாய்  வளர்ந்திடவோர்
நல்வாய்ப்பு  வருவதுபோல்  நாளெனக்கு  விடிகிறது


கற்றறிந்த  கவிஞரவர்  கற்றெனக்குத்  தந்திருந்தால்
கவிதையெனும்  வயலினிலே  காலாற  நடந்திருப்பேன்
ஏற்றமிகு  நாமமவர்  என்நாமத்தில்  இணைத்திருப்பேன்
ஆற்றாத  கவலைதான்  அவரின்றோ  நம்மிலில்லை



       அஷ்பா அஷ்ரப் அலி 

கருத்துகள் இல்லை: