வெள்ளி, ஜனவரி 24, 2014

கண்களைக் கண்டெழுது ..

கருவிழி  கொண்ட  கண்களினை -  தினம்
     கவிதையில்  நனைத்தே  மகிழ்கின்றீர்
இருவிழி  இழந்தோர்  இருவரியில் -  ஏன்
     எழுதிடக்  கைகளை  தடுக்கின்றீர் !

கண்களின் 
மேலழ  கறிந்திடும்நீர்  -  அது
     கசிந்திடும்  கண்ணீர்  கண்டிடுவீர்
வெண்காசக்  கண்கள்  பலவுண்டு  -  அது
    வினைகளில்  வீழ்வதை  உரைத்திடுவீர் !

பெண்களைப்  போற்றிட  பொழுதெல்லாம் - அவள்
      கண்களை  மான்விழி  என்கின்றீர்
தன்விழி  இழந்தவர்  கண்பேசும்  -  அத்
    துயர்கதை  கேட்டிட  மறுக்கின்றீர் !

அணங்கினர்  கண்களில்  அழகுண்டு  -  நம்
       ஆடவர்  கண்களில்  பொருளுண்டு
இணங்கிட  வைத்திடும் வாலிபரின்  -  நல்
        இணர்கண்  போற்றியும்  எழுதிடுவீர் !!


         அஷ்பா அஷ்ரப் அலி ..

கருத்துகள் இல்லை: