வியாழன், ஜூன் 02, 2016

காவடிச் சிந்து

கூடிநீ  வாழ்ந்திடு கண்ணே - உயிர்
கூடுக ளைந்திடு முன்னே - என்றும்
  குடியாதிரு  குலையாதிரு
   வடிவாயொரு விடிவேவரக்
  கொழிக்கும் - வாழ்வு - செழிக்கும்


கொள்கைக ளோடேநீ நின்று - கொண்ட
கொள்கைதான் வாழ்வென்ற னென்று - நீ
     குறியாயிரு குனியாதிரு
     வறியோனென வளையாதிரு
      குளிர்வாய் - வாழ்வில் - மிளிர்வாய் !

கருத்துகள் இல்லை: