செவ்வாய், டிசம்பர் 06, 2011

வேண்டுவன வேண்டும் !!

கண்ணதனைக் கவணமுடன் பேண வேண்டும்
காலமெல்லாம் அதன் ஒளியில் வாழ வேண்டும்
எண்ணமதை நல் வழியில் செலுத்த வேண்டும்
எண்ணிய சொல் மாறாமல் பேச வேண்டும் .......

கல்வியதைக் கசடறவே கற்க வேண்டும்
கற்றததை மற்றோர்க்கும் புகட்ட வேண்டும்
கல்லாதார் குணமறிந்து பழக வேண்டும்
நல்லோர்தம் நட்பதனை நாட வேண்டும் .......

கற்பு நிறை நல் மனைவி அமைய வேண்டும்
காலமெல்லாம் அவளன்பால் திளைக்க வேண்டும்
நற்பண்பு நல்மகவு பெருக வேண்டும்
நானிலத்தில் சிறந்தோராய் வளர்க்க வேண்டும் .......

பெற்றோரை கற்றோரை மதிக்க வேண்டும்
உற்றாரை உறவினரை போற்ற வேண்டும்
சிற்றின்ப ஆசைகளை அடக்க வேண்டும்
சீரியமாய் இப்புவியில் வாழ வேண்டும் .......

பொல்லாதார் நட்பதனைக் களைய வேண்டும்
நல்லோனாய் நானிலத்தில் உளவ வேண்டும்
இல்லாதார் நிலையறிந்து ஈய வேண்டும்
இன்முகமாய்க் கண் மூடி மடிய வேண்டும் ......

கருத்துகள் இல்லை: