புதன், ஏப்ரல் 23, 2014

நூல்களை நேசி !!

பூக்களாய்
சிதறிக் கிடக்கும்
புத்தகப் பந்தலில்
கொஞ்சம் கிடந்து பார்
வாசிப்பின் வசீகரம்
உன்னை எட்டிப் பிடிக்கும்


நல்ல நல்ல நூல்களோடும்
தொடர்பு வை  நீ
திக்கித் திக்கி எழுதும்
வார்த்தைகள் கூட
உனக்கு அடிமையாகும்


வாசிப்பின் வாசம் புரிய
சுவாசிக்கும் நீ
வாசிப்போடும் நட்பு கொள்
உன்னோடு
கை கோர்த்து நடந்து வரும்


வசப்படாத
வார்த்தைகளும்
உனக்குள் பிரசவமாகும்
வாசிப்பின் வசியம் புரிந்தால்


வார்த்தைக் குழப்பத்தில்
வழுக்கி வழுக்கி
விழுகிறாயா
வாசிப்பு மழையில்
நனைந்து பார்


அறிமுகமில்லாத
சொற்கள் எல்லாம்
உன் நெஞ்சில் கிடந்து
ஊஞ்சல் ஆடும் ..

-- அஷ்பா அஷ்ரப் அலி  --  ( ஏப்ரல் 23 உலக புத்தக தினம் )

கருத்துகள் இல்லை: