ஞாயிறு, ஏப்ரல் 10, 2016

கட்டளைக் கலித்துறை

சிந்தா திருந்தேன் சிரசில் கிடந்தவன் சிந்தையிலே
தந்தே னெனையே தருவானே வாழ்வைத் தயக்கமின்றி
பந்தா யுருட்டிப் பனிபோ லுருகிடப் பாய்விரிக்க
நொந்தே னவனால் நொறுங்கிய நெஞ்சினில் நோவினையே !

கருத்துகள் இல்லை: