ஞாயிறு, ஏப்ரல் 03, 2016

சிந்துப் பா ( நொண்டிச் சிந்து )

பட்டணம் போகாதே நீ  - அங்கு
  பட்டுத்தெ றிக்குது வெய்யில டி
கட்டணங்  கேட்பாரங் கே  - நாம்
  காலாறக்  குந்துங்க  ளிப்பறைக் கே !

ஆயிர மாயிரந் தான்  -  அங்கு
  ஆனந்தம் ஆங்காங்கு உண்மையும் தான்
நோயினில் வாழ்வதைப் போல் - தினம்
  நொந்துதான் வாழ்கிறார் நோவினை யால்

பட்டதைச் சொல்லிவிட்  டேன்  - பட்ட
  பாட்டினைப் பாடலில் பாடிவிட் டேன்
இட்டமு னக்குவுண் டேல் - ஒரு
  எட்டுநீ  போயங்கு  பாருபுள் ளே !

கருத்துகள் இல்லை: