புதன், ஜூன் 01, 2016

வளையற் சிந்து

கல்வியதைக்  கற்றிடுவாய்
கசடறவே  நாளும் - உன்
கனவுகளும் மீளும் - தினம்
கற்பதனால்  சூழும் - நல்ல
காலமுன்னில்  கனிந்துவந்து
கண்ணெதிரே வீழும் !


கல்வியுனக் களித்தவரைக்
காலமெல்லாம் போற்று - அவர்
காலடியில்  ஊற்று - தினம்
கண்ணியத்தி லேற்று - இது
கற்றறிந்த கல்விமான்கள்
கற்றுத்தந்த  கூற்று !

கருத்துகள் இல்லை: