சனி, ஜனவரி 28, 2017

வெண்பா ..

கற்றநற் கல்வியினைக் கற்றதுவே புண்ணியமாய்
மற்றோர்க்கு மூட்டி மகிழ்கின்றார் - கற்பிக்கும்
பேராசா னன்னவரைப் போற்றா திருப்பார்க்கு
வாராது வாழ்வில் வளம்

கருத்துகள் இல்லை: