வெள்ளி, மார்ச் 03, 2017

புதுக் கவிதை ...



மின்சார வெளிச்சத்தில்
கண்ணை மூடிக்கொண்டது
விளக்கின் ஒளி

கவனம் இல்லையேல்
கரணம்தான்
கிளைகள் சொல்கிறது
இலைகளுக்கு

சிக்கனம்
சட்டை போட்டுக்கொண்டது
மாதக் கடைசியில்

செத்துக் கிடந்தது
தெரு நாய்
நடுத்தெருவில்
சொந்தங்களை தொலைத்துவிட்டு

முந்தானை மட்டும்
பார்த்துப் பார்த்தே
மூர்ச்சை இழந்தது ஆசைகள்

தூங்கித் தூங்கியே
கவலைக் கிடமாகியது
வேலை இழந்த அம்மிக்கல்லு

கடித்து விடாதே
அலறியது
சோற்றில் கிடந்த 'கல்'

எச்சில் இலைகளுக்கு
சொந்தம் கொண்டாடியது
காகங்கள்

மனிதனுக்கும்
பிடித்து விட்டதாம்
"மதம் "
தெரியாதவர்களாய்
சொல்லிக் கொள்கிறார்கள்
'மனிதர்கள் '

கருத்துகள் இல்லை: