வியாழன், டிசம்பர் 26, 2013

புதுக் கதையொன்று சொல்லிட .. வா !!

கரு நீளக் கூந்தலிலே
கடைக் கூந்தல் நீயிணைக்க
என் கையாலே
முடிந்திடவா - உன்

பூவிதழில் சிந்துகின்ற
புன்னகையாய் நானமர்ந்து
புது மொழியொன்று பேசிடவா - அந்த

மருதாணிக் கையளைந்த
நெளிந்தாடும் விரல் இழுத்து
என் எச்சில் தெளித்திடவா - தினம்

சரிந்து விழும்  உன்  முந்தானை
சரியாகக் கணக்கிட்டு
சரி பாதி பிரித்திடவா - உன்

வெண்சங்கு கழுத்தளவில்
பொன்மாலை ஆகினானும்
புழு போல நெளிந்திடவா - இல்லை

பூ மாலை போன்ற உன்னை
புது மஞ்சத்தில் போட்டுவைத்து
புதுக் கதையொன்று சொல்லிட .. வா !!


     -- அஷ்பா அஷ்ரப் அலி --

கருத்துகள் இல்லை: