சனி, டிசம்பர் 28, 2013

புகையென கிளம்பும் பகை ...

வகையென மாந்தர் வாழ்ந்திடும் உலகில்
 வருத்திடும் இதயம் விளைந்தவர் ஒதுக்கி
புகையென கிளம்பும் பகைமையை உடைப்போம்
 பாரினில் நிலவும் பாதகம் களைய ..

மதமெனும் பெயரில் மறை முகமாக
 மதவெறி கொள்வோர் பதரென ஒதுக்க
இதயங்கள் எல்லாம் இன்முகம் காட்டி
 மதநல் இணக்கம் மகிழ்வுடன் பூக்கும் ..!


        அஷ்பா அஷ்ரப் அலி 

கருத்துகள் இல்லை: