ஞாயிறு, டிசம்பர் 29, 2013

பதின் பருவம் ...

பருவமது படருகின்ற
 பதின் பருவக் காலம்
அரும்பாகி  துளிர்த்து எழும்
 இளமையதன் கோலம்

நெருடுகின்ற நினைவெங்கும்
 நடமாடும்  ஆசை
வெறுமையுடன் அசைந்தாடும்
 இச்சைகளில் மூழ்கி

சுருக்குவழி சென்றடைந்து
 சுருக்கிட்டு மாண்டோர்
கறுக்களிலே கருவுற்று
 கதறிநிதம் நிற்போர்

அறுந்தாடிப் பறக்கின்ற
 பட்டம்போல் இங்கு
தெருவெங்கும் நிறைந்தாளும்
 காட்சிகளே அதிகம் ...


     அஷ்பா அஷ்ரப் அலி 

கருத்துகள் இல்லை: