வெள்ளி, மார்ச் 11, 2016

எல்லோர்க்கும் ஆசை !

கண்கெட்டுக் கிடக்குதடா உலகம்  - காணும்
   களமெல்லாம் நடக்குதடா  கலகம்
கால்பட்ட இடமெல்லாம் குருதி - இனக்
   கோளாறு இருக்கும்வரை உறுதி
உள்ளோர்க்கு ஒன்றிங்கு சட்டம் - உயர்
   வில்லார்க்கு கிடைக்குதிங்கு பட்டம்
எல்லோர்க்கும் இரத்தநிறம் சிவப்பு - அதை
   எண்ணாதோர் மனதிலேனோ கசப்பு


கண்கெட்ட விலைவாசி உயர்வால் - மக்கள்
   கண்ணீரை அணைத்திங்கே அயர்வார்
புண்ணாகிப் போனோரும் உண்டு - தினம்
   புழுதிவாரிப் போட்டோரும் உண்டு
ஆகாது என்றாலும் தேகம் - தினம்
   போதாது என்றலறும் போகம்
வேகாது வாழ்வோர்க்கு மாசை - வெந்து
   வேக்காடு ஆனோர்க்கு மாசை
    

கருத்துகள் இல்லை: