திங்கள், மே 16, 2016

நொண்டிச் சிந்து !

பட்டணம்  போகாத டி - அங்கு
பட்டுத் தெறிக்குது வெய்யில டி
கட்டணங் கேட்பாரங் கே - நாம்
காலாறக் குந்துங்க லிப்பறைக் கே !

ஆயிர மாயிரந் தான் -  அங்கே
ஆனந்த மாங்காங்கு உண்மையுந் தான்
நோயினில் வாழ்வதைப் போல் - தினம்
நொந்துதான் வாழ்கிறார் நோவினை யால் !

பட்டதைச் சொல்லிவிட் டேன் - பட்ட
பாட்டினைப் பாடலில் பாடிவிட் டேன்
இட்டமு னக்குவுண்  டேல் - ஒரு
எட்டுநீ போயங்கு பாருபுள் ளே !

கருத்துகள் இல்லை: