வெள்ளி, ஜனவரி 13, 2017

எண்சீர்க் கழிநெடிலடி விருத்தம்



காய் - காய் - மா - தேமா


சொற்புலமை யில்லாமல் சொற்ப காலம்
சொந்தமொழி நடையினிலே கதைகள் போலப்
பற்பலவாய் கவிதைகளைப் பாடித் தேய்ந்து
பைந்தமிழின் சோலையிலே புகுந்தேன் பின்னே
கற்றவராம் பாவலரின் கவிதைத் தொண்டு
கைகொடுத்து உதவுதென்னில் கைமுறை யாலே
நற்றமிழின் நடையழகை நேர்த்தி யோடே
நடந்தபடி கற்கின்றேன் நாளு மங்கே !

கருத்துகள் இல்லை: