வெள்ளி, ஜனவரி 13, 2017

அறுசீர்க் கழிநெடிலடி விருத்தம்



காய் - காய் - காய் - காய் - மா - தேமா





விரும்பியவா றெல்லாமிப் பூவுலகில் பொல்லாதார்
விளைக்குந் துன்பம் 
தருக்குடையா ருள்ளத்தில் தூய்மையிலா எண்ணத்தால்
தளிர்க்குந் துன்பம்
திரும்புகின்ற இடமெல்லாந் தீவினையைக் காணுகையில்
தீயாய் என்றன்
இதயத்தைச் சுடுகிறதே இருவிழியும் நனைகிறதே
இறைவா இங்கே!

கருத்துகள் இல்லை: