ஞாயிறு, ஜனவரி 29, 2017

நேரிசை வெண்பா !



சுட்டுவிர லால்சுட்டச் சுட்டுமுனை மற்றவிரல்
தொட்டுநீ வாழ்வதையே தொட்டுணர்த்து - இட்டமுடன்
மற்றவரில் வேண்டுமுன்னில் அற்றதைநீ நாடாதே
கற்றதுவோ கைம்மண் ணளவு

- அஷ்ஃபா அஷ்ரஃப் அலி -


-
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்‎ to பைந்தமிழ்ச் சோலை (மரபு பூக்கள் மட்டும்)

#சொன்னார்கள்

ஒருவிரலால் பிறர்குற்றம் சுட்டும் போது
உன்பக்கம் மூன்றுவிரல் சுட்டி நிற்கும்
(தாரா பாரதி)

முதலில் என்னைத் திருத்திக்கொள்கிறேன்.
பிறகு மற்றவர்களைத் திருத்த முயல்கிறேன்.
(நபிகள் நாயகம்)

பிறரிடம் எதை எதிர்பார்க்கிறாயோ
நீ அதேபோல் இரு.
(யாரோ)

கற்றது கைம்மண்ணளவு., கல்லாதது உலகளவு
(ஔவையார்)




அன்பு நண்பர்களுக்கு! கவிஞர்களுக்கு! வணக்கம். இந்தப் பதிவில் கண்டுள்ள பொன்மொழிகளை நேரிசை வெண்பாவாக எழுத முயலுங்களேன்! சமயக் குரவர் நால்வர் பாடலைப் போல இதுவும் ஒரு பயிற்சியாக அமையும்

கருத்துகள் இல்லை: