ஞாயிறு, பிப்ரவரி 12, 2017

நொண்டிச் சிந்து ..


பட்டணம் போகாத டி - அங்குப்
பட்டுத் தெறிக்குது வெய்யில டி
கட்டணங் கேட்பாரங் கே - நாம்
காலாறக் குந்துங்க ழிப்பறைக் கே !

ஆயிர மாயிரந் தான் - அங்கே
ஆனந்த மாங்காங்கு உண்மையுந் தான்
நோயினில் வாழ்வதைப் போல் - தினம்
நொந்துதான் வாழ்கிறார் நோவினை யால் !

பட்டதைச் சொல்லிவிட் டேன் - பட்ட
பாட்டினைப் பாட்டிலே பாடிவிட் டேன்
இட்டமு னக்குவுண் டேல் - ஒரு
எட்டுநீ போயங்கு பாருபுள் ளே !

கருத்துகள் இல்லை: