ஞாயிறு, பிப்ரவரி 12, 2017

இயலுமெனில் கொல்லு ..



கண்களினால் கலகம்செய்து
கட்டிவைத்தாய் என்னை - என்
கருவிழியில் கிடப்பதனால்
தொட்டிலிட்டேன் உன்னை !

ஆவலினால் காதல்செய்து
அலையுதடி மனசு - தினம்
ஆளுகின்ற உன்னினைவால்
ஆவதுண்மைப் பித்து !

பூவிழியால் இழுத்துவைத்துப்
பிழிந்ததெல்லாம் போதும் - உன்
பூவிதழால் புன்னகைத்துப்
பிடித்திருந்தால் சொல்லு !

இளநெஞ்சில் கிடந்தபடி
இடிப்பவளே நில்லு - உனை
இழப்பதெனில் சம்மதமே
இயலுமெனில் கொல்லு !

கருத்துகள் இல்லை: