புதன், அக்டோபர் 23, 2013

பூப் பூவாய் ஆசைகள் ...

வானத்து பூவெடுத்து
வழியெங்கும் அதைத்தூவி
நாணத்தில் நிற்கும் நீ
களிப்போடு நடக்க வேண்டும்

சீனத்து ராணியுன்னை
ஆழிக்கடல் முத்தெடுத்து
வானகத்தில் வடிவமைத்த
மாளிகையில் வைக்க வேண்டும்

தேனொத்த
உன்னிதழில்
விழிமூடி என்னிதழால்
நாணத்தை மூடி வைத்து
நாழிகையாய் படர வேண்டும்

எண்ணத்து இன்பமெல்லாம்
பள்ளியறைக் கதவடைத்து
வண்ணத்து வனப்பூட்டி
கள்ளியுன்னால் தீர வேண்டும்

ஈனத்து உறவெல்லாம்
கிளியுந்தன் நிலை பார்த்து
கானகத்து சறுகதுவாய்
நலிவுற்று மடிய வேண்டும்

காணத்து பொனவெந்தன்
கிலிகொண்ட வாழ்வு மீண்டு
சீனத்து ராணியுன்னால்
சிலிர்த்தெழுந்து துளிர்க்க வேண்டும் ....


    அஷ்பா அஷ்ரப் அலி

கருத்துகள் இல்லை: