சனி, டிசம்பர் 14, 2013

மதுரமரக் கிளையினிலே ..

மாலையிளம் ஒளியினிலே அவளைக் கண்டேன்
 மதுரமரக் கிளைகிளிபோல் பேசக் கண்டேன்
வாழையதன் வனப்பதுபோல் வடிவம் கண்டேன்
 வெதும்பியயென் மனதினிலே ஒளிர்வைக் கண்டேன் ..

சாலையெங்கும் காணுகின்ற கிளிகள் கண்டு
 வெதும்பாத வள்ளிதயம் எனக்கு உண்டு
சோலைக்கிளி பார்வையவள் பட்ட அன்று
 மெதுமெதுவாய் துடிப்பதேனோ இதயம் இன்று ..

மாலைக்கிளி அவளழகில் மயங்கி நின்றேன்
 பதுமையவள் புதுமையிலே வியந்து நின்றேன்
நாளையொரு நாள்வரட்டும் எனக்கே என்று
 இதங்கொடுத்து மனதினைனான் தேற்றிக் கொண்டேன் ..


     அஷ்பா அஷ்ரப் அலி 

கருத்துகள் இல்லை: