திங்கள், டிசம்பர் 09, 2013

பெண்மை பூத்திட வேண்டும் ..

ஆணவம் கொண்டு ஆளும்
 ஆண்களை அடக்கியே வைக்க
பெண்களின் கூட்டம் இங்கு
 மென்மையாய் பூத்திட வேண்டும்

தடைகளாய் கற்கள் இட்டு
 இடைஞ்சல்கள் காட்டு வோரை
படையென திரண்டு பெண்கள்
 புடைசெய புறப்பட வேண்டும்

வேலியாய் இருக்கும் ஆண்கள்
 பாலியல் தொல்லைகள் புரிந்தால்
நாழிகை கூட இன்றி
 நசுக்கியே கொன்றிட வேண்டும்

ஊழ்த்துணை ஆகும் பெண்கள்
 வாழ்வினில் வசந்தம்  கண்டு
தாழ்வினை தூரமே வைத்து
 தரத்தினில் சிறந்திட வேண்டும்

வாழ்வினை கலங்கம் பண்ணும்
 கால்களில் விலங்குகள் இட்டு
ஆழ்வியாய்  குடும்பம் காக்கும்
 நாளினி எங்கும் வேண்டும் ..

    அஷ்பா அஷ்ரப் அலி

  

கருத்துகள் இல்லை: