புதன், ஜனவரி 29, 2014

வெள்ளையுள்ளம் இல்லை எங்கும்.....

உள்ளங்கள்   அனைத்திலுமே
உதிரமது   சிவப்பு
உதவிடவே   கைகளென
உணர்வதில்லை   மனது ..

வெள்ளையுள்ளம்   உள்ளவராய்
வாழ்வதென   நினைப்பு
கள்ளமுற்ற  
நெஞ்சிலெங்கும்
கருமைநிறப்  பொலிவு  ..

கொள்கையெனும்  பெயரினிலே
குறுகுறுத்த  போக்கு
கொஞ்சமேனும்  குறைவதில்லை
கொடுஞ்சொல்லின்   வீச்சு  ...


    அஷ்பா அஷ்ரப் அலி 

கருத்துகள் இல்லை: