ஞாயிறு, பிப்ரவரி 02, 2014

இறைவனைப் புகழ்வாய் !!

வற்றா  நதியென   வளமளித்து
வாழும்  உயிருக்  குணவளிக்கும்
ஏற்றங்  கொண்ட  இறையோனை
என்றும்  துதிப்போர்  இங்கில்லை  !

போற்றா   திருப்போர்  ஒருபாதி
பொல்லா  துள்ளம்   மறுபாதி
ஏற்றத்  தாழ்வு   என்றி ன்றி
ஏந்திடும்  அவனை  நினைப்பதில்லை  !

ஆற்றாத்  துயரம்  சூழ்கையிலே
ஆயிர  மாயிரம்  அவ (ன் )
னினைவு
ஆற்றலில்  அவனின்  வல்லமையை
ஆழ்ந்தே  நோக்கிடக்  கண்களில்லை  !

வேற்றுமை  அகற்றி  உயிர்கட்கு
வேண்டுவ  தெல்லாம்  அளிப்பவனே
ஆற்றல்  கொண்ட  உன்னன்பால்
அளக்கும்  படியிலும்  குறைவில்லை  !

காற்றால்  மழையால் 
கதிரொளியால்
காலச்   சுழற்சியில்  எமைகாக்கும்
ஏற்றம்  பெற்ற   உனையன்றி
ஏகன்  வேறு   எமக்கில்லை  !!


       அஷ்பா அஷ்ரப் அலி 

கருத்துகள் இல்லை: