மண்டலம் வாழ்வோ ரெல்லாம்
முண்டமாய் ஆன தால்தான்
கண்படும் தூர மெல்லாம்
வன்முறை துளிர்த்த தெங்கும் !
அண்டமே சூழ்ந்து நின்ற
அமைதியின் வாடை நீங்கி
பண்டைய இனிமை இன்றி
புண்படும் வாழ்வு கண்டோம் !
கண்டனக் குரல் கொடுப்போர்
தண்டமே என வளைந்து
மண்ணினில் குவிந்த தால்தான்
மகிழ்வினை இழந்து விட்டோம் !
மாண்டிடச் செய்வோம் அந்த
மானுடம் வெறுக்கும் தொல்லை
அண்டியே வாழ்வோம் எங்கும்
அன்பெனும் கரங்கள் கோர்த்து !
அஷ்பா அஷ்ரப் அலி
முண்டமாய் ஆன தால்தான்
கண்படும் தூர மெல்லாம்
வன்முறை துளிர்த்த தெங்கும் !
அண்டமே சூழ்ந்து நின்ற
அமைதியின் வாடை நீங்கி
பண்டைய இனிமை இன்றி
புண்படும் வாழ்வு கண்டோம் !
கண்டனக் குரல் கொடுப்போர்
தண்டமே என வளைந்து
மண்ணினில் குவிந்த தால்தான்
மகிழ்வினை இழந்து விட்டோம் !
மாண்டிடச் செய்வோம் அந்த
மானுடம் வெறுக்கும் தொல்லை
அண்டியே வாழ்வோம் எங்கும்
அன்பெனும் கரங்கள் கோர்த்து !
அஷ்பா அஷ்ரப் அலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக