செவ்வாய், பிப்ரவரி 04, 2014

அண்டியே வாழ்வோம் என்றும் !!

மண்டலம்  வாழ்வோ  ரெல்லாம்
  முண்டமாய்  ஆன  தால்தான்
கண்படும்  தூர  மெல்லாம்
  வன்முறை  துளிர்த்த  தெங்கும் !

அண்டமே  சூழ்ந்து  நின்ற
  அமைதியின்  வாடை  நீங்கி
பண்டைய  இனிமை  இன்றி
  புண்படும்  வாழ்வு  கண்டோம் !

கண்டனக்  குரல்  கொடுப்போர்
  தண்டமே  என  வளைந்து
மண்ணினில்  குவிந்த  தால்தான்
  மகிழ்வினை  இழந்து  விட்டோம் !

மாண்டிடச்  செய்வோம்  அந்த
  மானுடம்  வெறுக்கும்  தொல்லை
அண்டியே  வாழ்வோம்  எங்கும்
  அன்பெனும்  கரங்கள்  கோர்த்து !


         அஷ்பா அஷ்ரப் அலி 

கருத்துகள் இல்லை: