சனி, பிப்ரவரி 15, 2014

எப்பக்கம் திரும்புவது ?

எங்கென்று   நோக்குவது
எதையெதைநான்   நோக்குவது ?
எப்பக்கம்   திரும்பினாலும்
ஏராளச்  சிக்கல்கள்  ..

வாதாட   வாய்கொண்டோர்
வாய்கிழிய   கத்துவதும்
ஆதாரம்   தேடித்தேடி
ஆடிடுவோர்   ஒருபக்கம் ..

சூதாட்டம்   மதுமங்கை
சொல்லாலே   வெறுத்தொதுக்கி
வேதாளம்   போல்வாழ்வோர்
வீதியெங்கும்   ஒருபக்கம்  ..

எண்ணத்தில்  
ஒன்றுவைத்து
எழிலோடு   புன்னகைத்து
வன்மனமாய்   வாழ்ந்திடுவோர்
வாசலெங்கும்   ஒருபக்கம் ..

எண்ணற்ற   வாக்குறுதி
எத்தனையோ   அள்ளிவீசி
கண்கெட்ட  அரசியலில்
கால்வைத்தோர்   ஒருபக்கம்  ..

நிந்திப்போர்   உள்ளவரை
எந்தவிதப்   பயனுமில்லை
வந்துவந்து   போகுமிந்த
சிந்தனையோ   ஒருபக்கம் ..


  அஷ்பா அஷ்ரப் அலி 

கருத்துகள் இல்லை: