வியாழன், பிப்ரவரி 13, 2014

வற்றா நதியென நீயுண்டு !!

வானும்  கடலும்  நமக்கென்றால்  -  என்
     வற்றா  நதியென  நீயிருக்க
காணும்  காட்சி  பலவிருந்தும்  -  நான்
     கண்டே  மகிழ்ந்திட  நீயாகி
தேனும்  பாலுஞ்  சுவைகொண்டு  - தினம்
     சேர்ந்தே  மகிழ்ந்திட  நீயுண்டு !


ஆற்றாத்  துயரம்  எனில்காண  - எனை
     தேற்றித்  தழுவிட  எனக்கென்றும்
காற்றாய்  மழையாய்  வகைகொண்டு  - என்
     காலம்  கனிந்திட  தினமென்றும்
ஊற்றாய்  பெருகிடும்  உணர் (வு ) கண்டு  - தினம்
     உவகை  பொங்கிட  நீயுண்டு !


காதல்  கீதம்  பல உண்டு  - அதை
     காதில்  இசைத்திட  நீயுண்டு
தோதாய்  உன்னில்  எனைகொண்டு  -  நான்
     தாழா  திருக்க  நீயுண்டு
 
சாதல்  எவர்க்கும்  பொதுவுண்டு  -  என்
     சாகா  வரமாய்   நீயுண்டு !


                அஷ்பா அஷ்ரப் அலி

       

கருத்துகள் இல்லை: