புதன், பிப்ரவரி 12, 2014

ஆட்டம் போடும் மனிதன் !!

தேனருந்தும்  வண்டினமோ  மலர்களோடு  கொஞ்சும்
    தேனிழக்கும்  நிலையறிந்து  மலர்களதும்  கெஞ்சும் !

கானகத்து  நடுவில்நின்று  கோலமயில்  ஆடும்
     கண்டதனில்  களிப்புற்று  கானக்குயில்   பாடும் !


ஊனமுற்றோர்  உலகெங்கும்  குமுறிமனம்  துடிப்பார்
     உதவிடநல்  கரங்கொண்டோர்   வேதம்தினம்  படிப்பார் !

மானமதை  இழந்தவராய்  மாக்களவர்  கூட்டம்
     மமதையுடன்  போடுகின்றார்  மண்ணிலிங்கு  ஆட்டம் !

வேரறுந்த  உறவுகளே  ஊர்நிறைந்து  வாழும்
     பார்தொடுத்த  போரினைப்போல்  உறவுமுறை  சூழும் !

தாரமதை  தள்ளிவைத்து  தனதின்பம்  சேர்ப்பார்
     தள்ளாடும்  நிலைவரவே  தாரம்கரம்   கோர்ப்பார் !


  அஷ்பா அஷ்ரப் அலி 

கருத்துகள் இல்லை: