திங்கள், பிப்ரவரி 10, 2014

வையம் எங்கும் அமைதி இல்லை !!

வானில்  தேய்ந்த  இளநிலவும்  -  அதன்
   வடிவம்  வளர  அமைதிபெறும்
தேனில்  அளையும்  வண்டினமும்  - தன்
   தேவைக்  கேற்ப  தேனுறிஞ்சும்
வீணில்  அலையும்  மனிதமனம்  - ஏனோ
   விருப்பம்  நிறைந்தும்  ஓய்வதில்லை !


விளங்கா  வாழ்வில்  வாழுமவன்  -  தினம்
   வீணாய்  வாழ்வைக்  கழிக்கின்றான்
விளக்கின்  ஒளியில்  வந்துவிழும்  -  அவ்
   விட்டில்  போலச்  சுருளுகின்றான்
கலங்கித்  தவிக்கும்  கண்கண்டும்  -  அவன்
   காணா  திருந்தே   மாளுகின்றான் !


பகுக்கும்  அறிவு  கொண்டோனாய்  - பாரில்
   பரமன்  படைத்த  மனிதஇனம்
ஆகும்  கலகக்  கும்பல்களால்  -  தினம்
   அழிந்தே  மடியுது  அனுதினமும்
வகுப்பென  வாழும்  இழிநிலையில்  -  இந்த
   வையம்  எங்கும்   அமைதிஇல்லை  !!


     அஷ்பா அஷ்ரப் அலி 

கருத்துகள் இல்லை: