வானில் தேய்ந்த இளநிலவும் - அதன்
வடிவம் வளர அமைதிபெறும்
தேனில் அளையும் வண்டினமும் - தன்
தேவைக் கேற்ப தேனுறிஞ்சும்
வீணில் அலையும் மனிதமனம் - ஏனோ
விருப்பம் நிறைந்தும் ஓய்வதில்லை !
விளங்கா வாழ்வில் வாழுமவன் - தினம்
வீணாய் வாழ்வைக் கழிக்கின்றான்
விளக்கின் ஒளியில் வந்துவிழும் - அவ்
விட்டில் போலச் சுருளுகின்றான்
கலங்கித் தவிக்கும் கண்கண்டும் - அவன்
காணா திருந்தே மாளுகின்றான் !
பகுக்கும் அறிவு கொண்டோனாய் - பாரில்
பரமன் படைத்த மனிதஇனம்
ஆகும் கலகக் கும்பல்களால் - தினம்
அழிந்தே மடியுது அனுதினமும்
வகுப்பென வாழும் இழிநிலையில் - இந்த
வையம் எங்கும் அமைதிஇல்லை !!
அஷ்பா அஷ்ரப் அலி
வடிவம் வளர அமைதிபெறும்
தேனில் அளையும் வண்டினமும் - தன்
தேவைக் கேற்ப தேனுறிஞ்சும்
வீணில் அலையும் மனிதமனம் - ஏனோ
விருப்பம் நிறைந்தும் ஓய்வதில்லை !
விளங்கா வாழ்வில் வாழுமவன் - தினம்
வீணாய் வாழ்வைக் கழிக்கின்றான்
விளக்கின் ஒளியில் வந்துவிழும் - அவ்
விட்டில் போலச் சுருளுகின்றான்
கலங்கித் தவிக்கும் கண்கண்டும் - அவன்
காணா திருந்தே மாளுகின்றான் !
பகுக்கும் அறிவு கொண்டோனாய் - பாரில்
பரமன் படைத்த மனிதஇனம்
ஆகும் கலகக் கும்பல்களால் - தினம்
அழிந்தே மடியுது அனுதினமும்
வகுப்பென வாழும் இழிநிலையில் - இந்த
வையம் எங்கும் அமைதிஇல்லை !!
அஷ்பா அஷ்ரப் அலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக