செவ்வாய், பிப்ரவரி 18, 2014

விழுந்தாலும் மகிழ்வேன் !!

விதிவந்து  விளையாடி
  விழும்போதும்   மகிழ்வேன்
சதிமாந்தர்  செய்தெனக்கு
  சரிந்தாலும்   மகிழ்வேன்

ஊரெல்லாம்  சேர்ந்தென்னை
  பகைத்தாலும்  மகிழ்வேன்
பாரெல்லாம்  சேர்ந்தென்னை
  வதைத்தாலும்  மகிழ்வேன்

கொடியோர்கள் கூடியென்னை
  கடிந்தாலும்  மகிழ்வேன்
அடியோடு  உறவெல்லாம்
  வெறுத்தாலும்  மகிழ்வேன்

குளிர்காற்று  வந்தென்னை
   தொட்டாலும்  மகிழ்வேன்
கடும் வெயில்வந்து  தீயாக
   சுட்டாலும்  மகிழ்வேன்

ஆவியெந்தன்  மேனியிலே
  இருந்தாலும்  மகிழ்வேன்
சாவுயென்னைத் தேடிவந்து
  அழைத்தாலும்  மகிழ்வேன் ..


  அஷ்பா அஷ்ரப் அலி 

கருத்துகள் இல்லை: