வியாழன், பிப்ரவரி 20, 2014

அழ வைத்த கண் கொண்டாள் ..

ஆழத்தில்  கிடந்தாலும்  அன்பே   நீயும்
     ஆற்றாத 
துயரந்தான்  எந்தன்  நெஞ்சில்
மீளத்தான்  முடியாதோ  மீண்டும்  மீண்டும்
     முள்ளாகிக்  குத்துகிறாய்  நெஞ்சில்  எங்கும்

காலத்தா  லழியாத  காதல்  என்றன்
     வேல்போலுன்  உள்ளத்தில்  பாய்ந்த  தாலோ
மாளத்தான்  வீழ்ந்தேனோ  உந்தன்  கண்ணில்
     விளக்கித்தான்  சொல்வாயோ  விபரம்  கூட்டி

கோணத்தில்  உன்னெண்ணம்  குறுக்கா  லோட
     கொதிக்கின்ற  என்னெண்ணம்  தவிக்கு  திங்கே
வானத்தின்  உயரத்தில்  வாழ்ந்தால்  நீயும்
     வாகாக  வாழ்வாய்நீ  என்னில்  என்றும்

தேனாக  சொட்டுகின்ற  பெண்கள்  கண்ணில்
     தேள்போலக்  கொட்டுகின்ற  கண்கள்  உண்டோ
ஆணாகப்  பிறந்தோர்க்கு  அல்லல்   தந்து
      அழவைத்த  கண்களில்நீ  நூற்றில்  ஒன்றோ  ?



                         அஷ்பா அஷ்ரப் அலி 

கருத்துகள் இல்லை: