வியாழன், மார்ச் 20, 2014

நீ அறிவாயோ !!

கடற்கரை மணலில் காலாற  -  சற்று
     களைப்பினை தீர்க்க நடந்திடநீ
படர்ந்துள மனதின் கவலையெலாம்  - நொடிப்
     பொழுதினில்  மாறுவ  தறிவாயோ

விடலைகள் காணும் கனவெல்லாம்  -  வெறும்
     ஒளியென வந்தே மறைந்துவிடும்
கடலென பொங்கும் ஆசைகளில்  - இங்கு
     கவிழ்ந்தவர் கோடி அறிவாயோ

படலையின் கண்ணில் பாவையர்கள்  - வெறும்
     பார்வையி  னாலே  பசியாற
இடர்துடைத்  தவரின்  கைகோர்க்க  - நம்
     மிளைஞரிங் கில்லை அறிவாயோ

ஆடவர் அன்பினில் தாரமதும்  -  அவள்
     அருகினில் கிடந்தே அளைந்தவனும்
தேடலில் தரித்திரத் துணைதேடி  -  வாழ்வை
     தொலைத்தவர் ஆயிரம் அறிவாயோ

தடமெனப் பதிந்த துயரெல்லாம்  - தம்
     தலையினில் கிடந்து  சிணுங்குகையில்
திடமுடன் உருகித் தம்மிறையை - தலை
     வணங்கிட நிம்மதி அறிவாயோ


     -- அஷ்பா அஷ்ரப் அலி --

கருத்துகள் இல்லை: