சனி, மார்ச் 22, 2014

துடித்தெழு !!

வாழ்கையின்  விளிம்பில்  நின்று
        வழுக்கியே  வீழும்  போது
தாழ்வினில்  கிடக்கும்  மனிதன்
       தனக்கென  கொண்ட  வாக்கில்
வாழ்வினில்  எல்லா  மிங்கு
       வருவது  பொதுவே 
வென்று
தோல்வியைத்  தனக்குத்  தானே
       தேற்றிடக்  காண்போ  மிங்கு !

வெண்பனித்  தூங்குங்  காலை
       விடியலே  கண்  திறக்க
எண்ணிலா  பறவை  எல்லாம்
       எழுந்தவர்  இரையைத்  தேட
கண்படும்  தூர  மெல்லாம்
       காரியம்  பல  விருக்க
முன்கடன்  பின்  கடன்போல்
       முடங்கியே  இவன்  கிடப்பான் !

அல்லலே  அல்லல்  என்று
       அகத்தினில்  கிடந்தா  லொன்றும்
இல்லவே  இல்லை  என்றும்
       இகத்தினில்  ஈடு  னக்கு
தொல்லைகள்  சூழும்  முன்னால்
       துடித்தெழு  வில்லாய்  வளை
எல்லையே  அற்ற  இன்பம்
       இனியுனக்  கென்றே  உணர்  !!


    அஷ்பா அஷ்ரப் அலி 

கருத்துகள் இல்லை: