புதன், மார்ச் 26, 2014

வேலி மீறிய கிளைகள் ..

வேலி மீறிய கிளைகளை
வெட்டி விடு
வெட்டாமல் விடு எனக்கென்ன

ஆடாத கிளைகள் கூட
அழுது கொண்டே இருக்கின்றன
அமைதியாக


ஆயிரம் எண்ணங்கள்
அதனதன் மனதினில்

அங்குசத்திற்கு
அடங்குமென்றால் யானை
ஆள் பலத்தால்
முடியாமலா போய்விடும் என்ன


கொஞ்சம் இரு
ஏன்
இப்படி வியர்க்கிறது உனக்கு  ?


    அஷ்பா அஷ்ரப் அலி

கருத்துகள் இல்லை: