புதன், மார்ச் 19, 2014

பிடித்திருந்தால் சொல்லு ..

கண்களினால் கலகம்செய்து
கட்டிவைத்தாய்  என்னை - என்
கருவிழியில் கிடப்பதனால்
தொட்டிலிட்டேன்  உன்னை

ஆவலினால் காதல்செய்து
அலையுதடி மனசு  -  தினம்
ஆளுகின்ற உன்னினைவால்
விளைவதுண்மை பித்து




பூவிழியால் இழுத்துவைத்து
பிழிந்ததெல்லாம்  போதும் - உன்
பூவிதழால் புன்னகைத்து
பிடித்திருந்தால் சொல்லு

இளநெஞ்சில் கிடந்தபடி
இடிப்பவளே நில்லு  - உனை
இழப்பதெனில் சம்மதமே
இயலுமெனில் கொல்லு ...

-- அஷ்பா அஷ்ரப் அலி --

கருத்துகள் இல்லை: