சனி, ஏப்ரல் 09, 2016

கலித்தாழிசை

நூலாடுஞ் சேலையிலே நோகாதி ருக்கவெனக்
 காலாட்டி நாங்கிடந்துக் கண்ணாற உறங்கிவிடத்
தாலாட்டுப் பாடுகிறத் தாயேவுன் தாழ்குரலே
 மேலாக வந்தெனது மென்காதில் இனிக்கிறதே
மெய்நோகக் கிடக்கின்றாய் மென்மேலு மினிக்கிறதே !

தொட்டா லாருமெனைத் தோல்நோகு மெனவறிந்து
 கட்டாந் தரையினிலே கால்நோகக் கிடந்தபடிப்
பட்டா லெவர்கண்ணும் பட்டுவிடா மற்பாட
 இட்டமுடன் தொட்டிலிலே இனித்திடுமே உன்குரலை
இனியெங்கு கேற்பேனோ நினைத்தாலே இனிக்கிறதே !

கருத்துகள் இல்லை: