சனி, ஏப்ரல் 09, 2016

சிணத்தோடு நான் !


விழுதுகள் போலுள உறவுக லெல்லாம்
  வீணெனச் சிதறிக் கிடக்கை யிலே
அழுதவன் பாதி தொழுதவன் மீதி
  அமைதி யிலாமலே வாழுகி றான்  !

கழுகுகள் போலக் காமுக ரிங்கே
  கால்களுக் கடியில் கிடக்கை யிலே
மெழுகுகள் போல மழலைக ளுயிர்கள்
  அழுகைக ளூடே கரையு திங்கே !

இழுபறி யாகும் இழிநிலை ஏனோ
  இகத்தினில் கிடந்தது சிரிக்கை யிலே
வலுவினி லுள்ளோர் வாய்களை மூடி
  வாழ்வதைக் காண  வருஞ் சிணமே !

கருத்துகள் இல்லை: